ரோசடோம் எனும் பூதம் –பகுதி -II: ரஷ்ய நிர்வாகமும் ரோசடோமும்
(கூடன்குளத்தில் அணுவுலைகளைக்
கட்டுகிற ரஷ்ய நிறுவனமான ரோசடோமின்(ROSATOM) சிக்கலான வரலாறு
பற்றின விமர்சனம்.கிரீன் பீஸ் அமைப்பின் அறிக்கையை முன்வைத்து)
ரஷ்யாவின்
அணுசக்தி திட்டங்கள் இரண்டாம் உலகப் போர்
காலகட்டத்தில் உருவானவை.போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்,சோவியத்திற்கும் அமெரிக்காவுடனான “கெடுபிடி போர்”சூழலாலனது
இரு நாடுகளுக்கு இடையிலான அணு ஆயுத குவிப்பிற்கான போட்டிக்கு இட்டுச்சென்றது.சோவியத்
தகர்விற்கு பிற்பாடு ரஷ்யாவின் ராணுவ மற்றும் சிவில் அணுசக்தி தொடர்புடைய
திட்டங்கள் ரஷ்ய அரசின் அணுசக்தி துறையின்(MINISTRY OF ATOMIC ENERGY OF THE RUSSIAN FEDERATION) கீழ் வந்தது.இத்துறை
சுருக்கமாக மினடோம்(MINATOM) என்றழைக்கப்பட்டது.
அதன் பிறகு 2007
ஆண்டில் தனிச் சிறப்பு சலுகைகள்,தனி சட்ட விதிகள் என பல சீர்திருத்தங்களுடன்,மினோடோம்
ரஷ்யாவின் தேசிய நிறுவனமாக மாற்றப்பட்டது.மினோடோம்(MINATOM) ரோசடோம்(ROSATOM) ஆக பெயர்மாற்றம்
செய்யப்பட்டது.
ரோசடோம்,ரஷ்ய
அதிபரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.ரோசடோமின் இயக்குனர் மற்றும்
கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர்களை ரஷ்ய அதிபரே நியமிக்கமுடியும்.
நீண்ட கால
தொலைநோக்குத் திட்டத்திற்கேற்ப, அதிகளவிலான நிதியை ரோசடோமிற்கு ரஷ்ய அரசு ஒதுக்குகிறது.ரோசடோமின்
கணக்கு வழக்குகளை அதன் உள் தணிக்க கமிட்டி மேற்பார்வை செய்கிறது.இத்தணிக்கை
கமிட்டி, கண்காணிப்பு கமிட்டியின் கட்டுப்பாட்டில் செயல்படும்.இதில் மிகப்பெரிய
முரண் என்னவென்றால் ரஷ்ய அரசின் உயர் அலுவல் பணியில் இருப்பவர் கண்காணிப்பு கமிட்டியிலும்,கண்காணிப்பு கமிட்டியில் உள்ளவர் அரசின் அலுவல் பணியிலும் அங்கம் வகிப்பார்கள்.உதாரணத்திற்கு ரோசடோமின்
தற்போதைய நிர்வாக இயக்குனராக உள்ள செர்ஜி கிரியேன்கோ,ரஷ்யாவின் முன்னாள் பிரதமராக
இருந்தவர்.அதேபோல ரஷ்ய அதிபரின் அரசியல் ஆலோசகர்,பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்
ரஷ்ய அரசின் ஆற்றல் துறை அமைச்சரே கண்காணிப்பு கமிட்டியில் அங்கம் வகிக்கின்றனர்.
ரோசடமிற்கு பல
சிறப்புச் சட்டங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டன.இச்சட்டங்கள் ரோசடோமின்
செயல்பாடுகளுக்கு கேடயமாகத் திகழ்ந்தன.ரஷ்ய அதிபரின் சிறப்பு கவனக் குவிப்பும்,
வழிகாட்டுதலுக்கும் மேலாக சக்திவாய்ந்த தன்னாட்சி நிறுவனமாக ரோசடோம் திகழ்ந்தது என்றே
கூறவேண்டும்.உதரனத்திற்கு சொல்ல வேண்டும் என்றால்,ரோசடோமிற்கு தொடர்பில்லாத
எந்தவொரு ரஷ்ய உயர் அதிகாரியும்,பிரதேச ஆளுமைகளும் ரோசடோமின் செயல்பாடுகளில்
தலையீடு செய்ய இயலாது.பிரத்யேக சட்டத்தின் அடிப்படையில் சில அதிகாரிகள் வேண்டுமானால்
தலையீடு செய்யமுடியும்.மேலும் ரோசடோமின் கணக்கு வழக்குகள்,செயல் திட்டங்கள்
குறித்த எந்த தகவல்களும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்படமாட்டாது.அரசின்
ரகசியங்கள் என்ற சட்டகத்திற்குள் ரோசடோமின் அனைத்து செயல்பாடுகளும் மக்களுக்கு
எந்தவித தொடர்புமில்லாத வகையில் சுருக்கப்படுகின்றன. இவ்வகையான வெளிப்படைத்தன்மையற்ற
போக்கால் ரோசடோமின் ஊழல்,உபகரணங்களின் தரம்,அதன் பாதுகாப்புத் தன்மை,திட்டங்களின் தாமதங்கள்
குறித்த எந்த கேள்வியும் கண்காணிப்பிற்கும் வாய்ப்பில்லாமல் போயிற்று. அதேவேளையில்,ரோசடோமுக்கு
ரஷ்ய அரசாங்கமானது சிறப்பு சட்ட
விலக்குகள்,நிதி உதவிகள் என பல வகைகளில் உதவினாலும்,ரோசடோமில் நிலவுகிற பல்வேறு
சிக்கல்களை ரஷ்ய அரசால் தடுக்க இயலவில்லை என்றே கூறலாம்.
ரோசடோமின் அணுசக்தி
செயல்பாடுகளுக்கு ரஷ்ய அரசு வழங்குகிற மானியங்கள்:
ரஷ்யாவின் 33 சிவில்
அணுசக்தி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.இதன் மூலமாக 25 ஜிகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுகிறது.சர்வதேச அளவில்,அணுசக்தி மின்சார உற்பத்தியில் ஜப்பான்,பிரான்ஸ்
மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது.ஆனால் பயனீட்டாளர்கள்
அடிப்படையில் பார்த்தோமானால் ரோசாடோமே உலகளவில்
முதலிடத்தில் உள்ளது.உள்நாட்டில் அணுவுலை விரிவாக்கத் திட்டப்பணிகளுக்கு அதிக
அழுத்தம் கொடுக்கிற ரோசடோம்,நடைமுறையில் திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வியே
சந்தித்து வருகிறது.கடைசி பத்தாண்டுகளில், ரஷ்யாவில் ரோசடோம் கட்டிய மூன்று அணுவுலைத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது.
ஒன்று, இருபதாண்டு
கால கட்டுமானத்தை அடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது.ரோஸ்ட்டாவில்
உள்ள மற்றொரு அணுவுலை இருபத்தியேழு கால
கட்டுமானத்தை அடுத்து 2010 ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது.மூன்றாவது அணுவுலை
இருபந்தைந்து ஆண்டுகால கட்டுமானத்தை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டில் உற்பத்தியைத்
தொடங்கியது.31 அணுவுலைத் திட்டங்கள் தீட்டப்பட்டு அதில் 18 பரிந்துரைக்கப்பட்டு
இறுதியாக, தற்போது 9 அணுவுலைத் திட்டங்கள் கட்டுமானப் பணியில் உள்ளன.
அணுவுலைகளை
விற்பதற்கு சர்வதேச அளவில் ஒப்பந்தங்களை மேற்கொள்வது, வெளிநாடுகளில்
அணுவுலைக் கட்டுமானங்களை மேற்கொள்வது என தீவிரமாக அணுவுலை விரிவாக்கத் திட்டங்களை
ரோசடோம் மேற்கொண்டுவருகிறது.சில சந்தர்ப்பங்களில் இவை இரண்டையும் இணைத்து போட்(BOT)(Built,Operate,Transfer)(கட்டு,சொந்தமாக்கு,செயல்படுத்து) என்ற ஒப்பந்தத்தின் பேரில் அணுவுலைகளை
கட்டுகிறது.சர்வதேச அளவில் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக 80 அணுவுலைகளை கட்டுவது என்ற இலக்கை
ரோசடோம் நிர்ணயத்துள்ளது.அதில் 19 அணுவுலைத் திட்டங்கள் பேச்சுவார்த்தை அளவில் உள்ளன.சர்வேதச அளவிலும்
தேசிய அளவிலுளும் அணுவுலை திட்ட பணிகளுக்கு அதிக கவனம் கொடுத்து செயல்பட்டாலும்
அதன் அதீத நம்பிக்கை மற்றும் சத்தியங்கள் தோல்விப் பாதையிலேயே பயணிக்கிறது.
அணுவுலைத்
திட்டங்களோடு அணுசக்திக்கான எரிபொருள் விற்பனையிலும் ரோசடோம் ஈடுபட்டுவருகிறது.யூரேனியம்
எரிபொருள் உற்பத்தியில் உலகளவில் ரோசடோம் ஐந்தாவது இடத்தில உள்ளது.ஐரோப்பிய
ஒன்றியத்தில் செயல்படுகிற அணுவுலைகளில் 27 விழுக்காட்டு யூரேனியம் எரிபொருளை ரோசடோமே
வழங்குகிறது.
மேலும்,ரோசடோம்
கட்டுகிற அணுவுலைகள் ஒப்பீட்டு அளவில் மலிவானவை என்ற பிம்பத்தை கட்டுவதற்காக
வேண்டுமென்ற அதன் உற்பத்தி செலவை செயற்கையாக குறைக்கிறது.இதை நேரடியாக தனது சொந்த
மானியத்தை வழங்கி சரி கட்டுகிறது ரஷ்ய அரசு. நடைமுறையில் ரோசடோம் கட்டுகிற
அணுவுலைகள் மலிவானவை என நிரூபணம் ஆகவில்லை.ஏனெனில்,மலிவு விலையில் அணுவுலைகளை
கட்டுகிற தொழில்நுட்பமும் அதனிடம் இல்லை.
நேரடியாக மானியம்
வழங்குவதோடு மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் ரோசடோம் சலுகைகளைப் பெறுகிறது.உதாரணத்திற்கு
கதிர் வீச்சு தன்மையுடைய திரவக் கழிவுகளை அகற்றுவதற்கு எந்த வித வழிமுறையும்
எட்டப்படாத நிலையில் அதை நேரடியாக மண்ணுக்குள் திணிக்கிறது ரோசடோம்.இதன் மூலமாக அத்திட்டங்களில் அணுக்கழிவுகளை
அகற்றுவது குறித்த ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படுகிற நிதி அனைத்தும் மறைமுகமாக
ரோசடோமிற்கு செல்கிறது.
---- பூதம் இன்னும் வரும்
No comments:
Post a Comment